Friday, December 31, 2010

பினாத்தல் - 6

சாதியைப் பற்றிய எனது நிலைப்பாடு

இந்நிலைப்பாடு சாதியின் கொடுமைகளை உணராமல், சாதிக் கொடுமை என்பதை புத்தகங்கள் வாயிலாக மட்டுமே அறிந்து, பாடப்புத்தகத்தில் தீண்டாமை ஒரு பாவச்செயல், தீண்டாமை ஒரு பெருங்குற்றம், தீண்டாமை என்பது மனிதத்தன்மையற்ற செயல் என அர்த்தம் விளங்காமலேயே படித்து வளர்ந்தவனின் நிலைப்பாடு. இப்படி வாழ்ந்தவனுக்கு பெரிதாக என்ன ஒரு நிலைப்பாடு இருக்க முடியும் சாதியைப் பற்றி என நினைக்கிறீர்களா, இங்கேயே நிறுத்தி விடுங்கள், மேற்கொண்டு படிக்காமல்.

பள்ளிப்பருவம், சாதி எனக்கு அறிமுகமான பருவம். பள்ளியில் சேர்வதற்கு சாதிச் சான்றிதழ் தேவைப்பட்ட பொழுது தான் எனக்கும் சாதிக்கும் பரிச்சயம் தொடங்கியது. பள்ளியில் சேர்வதற்காக தேவைப்பட்ட எனது ஜாதி, பின்நாட்களில் வெளியுலகத்துக்கு, என்னை நான் எனது தந்தை பெயர் கொண்டு இன்னார் மகன் என அறிமுகப்படுத்திக் கொண்ட போது என்னை அடையாளம் கண்டு கொள்ளாத சிலருக்கு நானாக எனது சாதியைக் குறிப்பிடாமல் இருந்த போதும், அக்குழுவில் என்னை அடையாளம் கண்டு கொண்ட சிலர், என்னை அடையாளம் கண்டு கொள்ள இயலாதவர்களிடம் எனது தந்தையின் பெயரைச் சாதியின் பெயரோடு சொல்லி அறிமுகம் செய்து வைத்த போது என்னை அடையாளம் கண்டு கொண்டார்கள். இவ்வாறு தான் என்னால் சாதி என்பது பிள்ளைப்பருவத்தில் உணரப்பட்டது.

ஒருவனுக்கு கர்வம் என்பது எப்பொழுது வருகிறது. ஒருவனுக்கு தான் பெரியவன் என்ற எண்ணம் எப்பொழுது வருகிறது. தன்னை மற்றவர் புகழும் போதும், உயர்த்திப் பேசும் போதும்தானே... அப்படித்தான் என்னுள் சில காலம் சாதி வேறுபாடு பார்க்கும் குணம் தலையெடுத்திருந்தது. அதற்கு காரணம் என்னைச் சாதி வேறுபாடு பார்க்க வைத்த எங்கள் வயலில் வேலை செய்பவர்கள் நான் மிகச் சிறியவனாய் இருந்த போதும் எனக்கு அளித்த மரியாதை, எனக்கு அறிமுகம் இல்லாத வெளியுலகத்திலும் நான் இன்ன சாதியினன் என்பதால் கிடைத்த மரியாதை போன்ற நிகழ்வுகள்.

இக்குணம் என்னுள் இருந்த வயது பதினொன்று. நாளாக நாளாக பதினைந்து வயதுக்குள் என்னுள் இருந்த இக்குணம் முற்றிலும் மாறி விட்டது. எப்படி? இதைப் பார்க்கும் முன்னர் சில கேள்விகள் எழுகிறது என்னுள். அவை,

சாதீயக் கொடுமைக்கு எதிராக குரல் கொடுக்கிறேன் எனச் சொல்பவர்கள் பெரும்பாலும் பார்ப்பனீயத்திற்கு எதிரான குரலை மட்டும் கொடுப்பது ஏன்?

சாதியை ஒழிக்க வேண்டும் என விரும்புபவர்களில் பலர் சாதியின் அடிப்படையில் அளிக்கப்படும் முன்னுரிமைகளை வரவேற்பது ஏன்?

பினாத்தல் தொடரும்...

No comments:

Post a Comment